எதுகை,மோனை,இயைபு

மோனை :

ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. 
மோனை இரண்டு வகைப்படும்.
அவை
  • அடிமோனை
  • சீர்மோனை
I. அடிமோனை:
முதலடி முதல் எழுத்தும் , 
2ம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது 
(எ.கா): 
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின் 
தன்னெஞ்சே தன்னைச் சுடும்
II. சீர்மோனை: 
சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர்மோனை
(எ.கா): 
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு

சீர்மோனை ஏழு வகைப்படும் 
அவை 
  1. இணை (1,2)
  2. பொழிப்பு (1,3)
  3. ஒரூஉ (1.4)
  4. கூழை (1,2,3)
  5. கீழ்க்கதுவாய் (1,2,4)
  6. மேற்கதுவாய் (1,3,4)
  7. முற்று (1,2,3,4)
1. இணை மோனை : (1,2)
ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற மோனை, இணை மோனை. 

(எ.கா): 
டிப்பாரை ல்லாத ஏமரா மன்னன்

2 . பொழிப்பு மோனை: (1,3)
ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற மோனை பொழிப்பு மோனை

(எ.கா):
ரிக்குரல் கிண்கிணி ரற்றும் சீறடி”

3. ஒரூஉ மோனை (1.4)
ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ மோனை 

(எ.கா) 
ம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் 
கற்றி

4. கூழை மோனை (1,2,3)
ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற மோனை, கூழை மோனை 

(எ.கா):
'கன்ற ல்குல்' ந்நுண் மருங்குதல்

5. கீழ்க்கதுவாய் மோனை (1,2,4) 
ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் மோனை

(எ.கா): 
ருள்சேர் ருவினையும்
சேர  றைவன்

6. மேற்கதுவாய் மோனை{1,3,4)
ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் மோனை

(எ.கா):
ரும்பிய  கொங்கை வ்வளை 
மைத்தோள்

7.முற்று மோனை (1,2,3,4)
ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற மோனை முற்று மோனை

(எ.கா): 
ற்க  சடற  ற்பவை  ற்றபின்

எதுகை :

ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
எதுகை இரண்டு வகைப்படும்
அவை
  • அடி எதுகை
  • சீர் எதுகை
I.அடி எதுகை
அடிதோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை

(எ.கா): 
ர  முதல   எழுத்தெல்லாம்  ஆதி 
வன்   முதற்றே   உலகு

II.சீர் எதுகை
சீர் தோறும் 2 ம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை

சீர்எதுகை ஏழு வகைப்படும் 
அவை 
  1. இணை (1,2)
  2. பொழிப்பு (1,3)
  3. ஒரூஉ (1.4)
  4. கூழை (1,2,3)
  5. கீழ்க்கதுவாய் (1,2,4)
  6. மேற்கதுவாய் {1,3,4)
  7. முற்று (1,2,3,4)
1. இணை எதுகை (1,2): 
ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற எதுகை இணை எதுகை

(எ.கா): 
ற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியே
2. பொழிப்பு எதுகை (1.3) :
ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற எதுகை பொழிப்பு எதுகை 

(எ.கா): 
தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
3. ஒரூஉ எதுகை (1.4) : 
ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ எதுகை (எ.கா): ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
4. கூழை எதுகை (1,2,3) : 
ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் வருகிற எதுகை, கூழை எதுகை 
(எ.கா): 
ற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை
5. கீழ்க்கதுவாய் எதுகை (1,2,4) : 
ஒரு அடியின் முதல், இரண்டு மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் எதுகை
(எ.கா): 
ழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
6. மேற்க்கதுவாய் எதுகை (1,3,4) : 
ஒரு அடியின் முதல், மூன்று மற்றும் நான்காம் சீர்களில் ஒன்றாக வருவது மேற்கதுவாய் எதுகை
(எ.கா) : 
ற்க கடசற கற்பவை கற்றபின்
7. முற்று எதுகை : 
ஒரு அடியின் முதல் நான்கு சீர்களிலும் வருகிற எதுகை முற்று எதுகை
(எ.கா) :
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு

இயைபு :

ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு.
(எ.கா) :

நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!
இதில் ”ண்டி” என்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன. 
இயைபு இரண்டு வகைப்படும்
அவை
  • அடி இயைபு
  • சீர் இயைபு
I. அடி இயைபு : 
அடிதோறும் இறுதி எழுத்து, அசை, சொல் ஆகியன ஒன்றிவருவது அடி இயைபு
(எ-கா) 
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்
II.சீர்இயைபு: 
ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபு.
சீர்இயைபு ஏழு வகைப்படும் 
அவை 
  1. இணை (1,2)
  2. பொழிப்பு (1,3)
  3. ஒரூஉ (1.4)
  4. கூழை (1,2,3)
  5. கீழ்க்கதுவாய் (1,2,4)
  6. மேற்கதுவாய் (1,3,4)
  7. முற்று (1,2,3,4)
1. இணை இயைபு (1,2)
ஒரு அடியின் 1,2 ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ஒன்றி வருவது இணை இயைபு
(எ-கா) : 
மொய்த்துடன் தவழும்
 முகிலே பொழிலே
2.பொழிப்பு இயைபு (1,3)
ஒரு அடியின் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு இயைபு .
(எ-கா) :
‘அயலே முத்துறழ் மணலே
3. ஒரூஉ இயைபு(1.4)
ஒரு அடியின் ஒன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ இயைபு.

(எ-கா) : 
நிழலே இனியதன் அயலது கடலே
4.கூழை இயைபு (1,2,3)
ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது கூழை இயைபு.
 (எ-கா) : 
நகிலே வல்லே இயலே

5. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4)
ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களின் இறுதி எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் இயைபு.
(எ-கா) : 
வில்லே நுதலே வேற்கண் கயலே
6. மேற்கதுவாய் இயைபு (1,3,4) 
ஒரு அடியின் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் இயைபு
(எ-கா) : 
பல்லே தவளம் பாலே சொல்லே

7. முற்று இயைபு (1,2,3,4 )
ஒரு அடியின் நான்கு சீர்களிலும் ஈற்றெழுத்து ஒன்றி வருவது முற்று இயைபு
(எ-கா) : 
புயலே குழலே மயிலே இயலே

Comments

Post a Comment

Popular posts from this blog

அணி இலக்கணம் பொதுத்தமிழ் Tnpsc

பெயர்ச் சொல்லின் வகையறிதல் பொதுத்தமிழ் Tnpsc