எதுகை,மோனை,இயைபு
மோனை : ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை. மோனை இரண்டு வகைப்படும். அவை அடிமோனை சீர்மோனை I. அடிமோனை: முதலடி முதல் எழுத்தும் , 2ம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வருவது (எ.கா): தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் II. சீர்மோனை: சீர் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர்மோனை (எ.கா): துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு சீர்மோனை ஏழு வகைப்படும் அவை இணை (1,2) பொழிப்பு (1,3) ஒரூஉ (1.4) கூழை (1,2,3) கீழ்க்கதுவாய் (1,2,4) மேற்கதுவாய் (1,3,4) முற்று (1,2,3,4) 1. இணை மோனை : (1,2) ஒரு அடியின் முதல் இரு சீர்களிலும் வருகிற மோனை, இணை மோனை. (எ.கா): இ டிப்பாரை இ ல்லாத ஏமரா மன்னன் 2 . பொழிப்பு மோனை: (1,3) ஒரு அடியின் முதல், மூன்றாம் சீர்களில் வருகிற மோனை பொழிப்பு மோனை (எ.கா): அ ரிக்குரல் கிண்கிணி அ ரற்றும் சீறடி” 3. ஒரூஉ மோனை (1.4) ஒரு அடியின் முதல், நான்காம் சீர்களில் ஒன்றாக வந்தால் ஒருஉ மோனை (எ.கா) அ ம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் அ கற்றி 4. கூழை மோனை (1,2,3) ஒரு
Comments
Post a Comment