புணர்ச்சி
நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது புணர்ச்சி எனப்படும். இவ்வாறு இருசொற்கள் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றி, இயல்பாகச் சேர்வது இயல்புப்புணர்ச்சி. (எ.கா) : பொன் + வளையல் = பொன்வளையல். இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை விகாரப்புணர்ச்சி என்பர். (எ.கா.) : 1 . வாழை + பழம் = வாழைப்பழம் – தோன்றல். 2. மரம் + வேர் = மரவேர் – கெடுதல். 3 . பொன் + குடம் = பொற்குடம் – திரிதல். திசைப்பெயர்ப் புணர்ச்சி, பண்புப்பெயர்ப் புணர்ச்சி, மகர ஈற்றுப்புணர்ச்சி ஆகியன. திசைப்பெயர்ப் புணர்ச்சி : முதன்மைத் திசைகள் நான்கு. அவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகியன. திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) : 1 . வடக்கு + கிழக்கு = வடகிழக்கு. 2 . வடக்கு + மேற்கு = வடமேற்கு. வடக்கு என்னும் நிலைமை கிழக்கு, மேற்கு என்னும்வருமொழிகளோடு சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்துகளான க், கு நீங்கிப் புணர்ந்தது. (எ.கா.) : 3 ....
Lucky Club Casino Site - Home | Live Casino Online
ReplyDeleteLucky Club is the perfect place for you luckyclub to start making some money with your next casino. This trusted online casino is one of the most trusted online casinos with